TNPSC தேர்வர்களுக்கான முக்கிய உத்தரவு – அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய உத்தரவு - அறிவிப்பு வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய உத்தரவு – அறிவிப்பு வெளியீடு!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகள் அடங்கிய பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வருகிற வருகிற 28ம் தேதி அன்று நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

TNPSC செயலாளர் அறிக்கை:

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த 18.09.2021 அன்று நடைபெற்று. மேலும் எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 15.2.22 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் மீன்வளத்துறையில்‌ இளநிலை பொறியாளர்‌, பொதுப்பணித்துறையில்‌, இளநிலை வரைவாளர்‌ தெரிவு தொடர்பான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 28ம் தேதி அன்று சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீடு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதையடுத்து கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

SSC துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 1,42,000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இட ஒதுக்கீடு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!