தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வி தொலைக்காட்சி வகுப்புகள்!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா காரணமாக கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களுக்கு சந்தேகங்கள் போன் வழியாக தீர்க்க ஆசிரியர்கள் தங்களது மொபைல் எண்ணை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டன. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தினால் கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பேருந்துகளில் இன்று முதல் இலவச பயணம் – போக்குவரத்து கழகம்!
இந்நிலையில் தொடக்கப்பள்ளி இயக்குனர், முதன்மை கல்வி இயக்குனர் அவர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக எந்த நேரத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற அட்டவணை டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களுக்கு நேரடியாக அட்டவணை பிரதி வழங்கப்பட வேண்டும்.
மேலும் பள்ளிகளில் இந்த அட்டவணையை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். மாணவர்கள் தங்களது வீடுகளில் வகுப்புகளை கவனிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஸ்மார்ட் போன் மற்றும் கல்வி தொலைக்காட்சி பார்க்க வசதி இல்லாத மாணவர்கள் விவரங்கள் சேகரிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டு பாடங்களை சரியாக செய்து அதனை ஸ்மார்ட் போன் மூலமாக அனுப்ப வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க ஆசிரியர்கள் அவர்களது மொபைல் போன் எண்ணை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். போன் வசதி இல்லாத மாணவர்களின் பெற்றோர்களை நேரடியாக அழைத்து, மாணவர்கள் வீடுகளில் முடித்த அசைன்மென்ட்களை பெற்று அதனை மதிப்பீடு செய்ய வேண்டும். மேலும் கல்வி தொலைக்காட்சி மற்றும் யூடியூப் மூலமாக மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.