தமிழக அரசு ஊழியர்களுக்கான முக்கிய உத்தரவு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தலைநகர் சென்னையில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வார்டு பொறியாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவு:
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட திருவாரூர், ராணிப்பேட்டை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடிவடையாததால் அம்மாவட்டங்களுக்கு மட்டும், தனியாக இரு கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன் படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்றது. பிறகு வாக்காளர் பட்டியலில் புதிதாக 10.17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனவரி 3 அல்லது 4ம் வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை தேர்தல் ஆணையம் மாலை 6.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்டார். அதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL 2022: ஏலத்தில் பங்கேற்கும் IPL அணிகளிடம் எஞ்சியிருக்கும் கோடிகள் – ஒரு அலசல்!
மேலும் ஜனவரி 28ம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பொது இடங்களில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை உடனடியாக அகற்ற அனைத்து வார்டு மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பொது இடங்களில் உள்ள கட்சி சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவை நீக்கப்பட்டு வருகிறது.