தமிழக அரசு ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு – 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு – 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் நாளை மறுநாள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

முக்கிய உத்தரவு:

தமிழகத்தில் 3வது அலை, கடந்த ஜனவரி மாத இறுதியில் படிப்படியாக குறைந்தது. இதனால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்து, பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டார். இந்த அறிவிப்பு படி, மாணவர்களும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Exams Daily Mobile App Download

தொடர்ந்து 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற 10ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில்,10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘மே 5 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்கவும், அப்படி மின் தடை ஏற்பட்டாலும் உடனடியாக மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும்’ என மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

மே 6 முதல் ஜூலை 3 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – முதல்வர் முக்கிய உத்தரவு!

மேலும் பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும், பொதுத் தேர்வின் போது எந்த ஒரு காரணத்திற்காகவும் மின் தடை ஏற்படக்கூடாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றவும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!