தமிழக ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு – கூட்டுறவு துறை அதிரடி!
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை மட்டுமே விற்பனையாளர்கள் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அதையும் மீறி மக்களுக்கு தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
கூட்டுறவு துறை எச்சரிக்கை:
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு வழங்கும் பருப்பு, அரிசி, எண்ணெய், கோதுமை இவற்றை தவிர்த்து வேறு சில பொருட்களான சோப்பு, கடுகு, பயறுகள் போன்ற மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், சோப்பு, கடுகு, பயறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியருக்கு விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் எந்த வித மளிகை பொருட்களும் சிந்தாமலும், பாதிப்பு இல்லாமலும் தான் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு கீழே சிந்தும் பட்சத்தில் அவற்றை உடனே சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தீபாவளியை ஒட்டி சிறப்பு ஏற்பாடு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், காலாவதி ஆன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர்களுக்கும், கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்கள் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, மக்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும் என்றும், விற்பனை செய்யப்படும் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றுடன் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்து வழங்க வேண்டும். இவற்றை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்