முதுநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!

1
முதுநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பு - அமைச்சர் விளக்கம்!
முதுநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பு - அமைச்சர் விளக்கம்!
முதுநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இதனை அடுத்து தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களுக்கு கல்வி திறனை அதிகரிக்கும் வகையில் பாடங்கள் நடத்த ஆசிரியர்களுக்கு தனி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அலுவல் சார்ந்த கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முது நிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து பல்வேறு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அமைச்சர்.

TNPSC தேர்வர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – மிஸ் பண்ணாம படிங்க!

Exams Daily Mobile App Download

அதில் அரசு பள்ளியில் தற்காலிக பணி நியமனம் குறித்து நீதிமன்ற வழக்கு நிலவரம், மழலையர் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவைப்படுவதாக தகவல் வந்துள்ளது. முதற்கட்டமாக முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் மற்ற பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்காலிக பணி நியமன ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. தொடக்கக்கல்வி இயக்குநர் பணியிடம் கட்டாயம் பெண் ஆசிரியை அதுவும் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி 25 ஆண்டுகால அனுபவமிக்க என்னைப்போல் ஆசிரியை நியமனம் செய்தால் பள்ளிக்கல்வித்துறை சிறப்படையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!