அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு – மாநில அரசின் புதிய மாற்றம்!
ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய தகுதியை தற்போது அமலில் இருக்கும் 28 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளாக குறைத்துள்ளது.
ஓய்வூதிய ஆண்டு
ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன்னதாக முக்கிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதாவது அசோக் கெலாட் அரசு முழு ஓய்வூதியத் தகுதியை தற்போதைய 28 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. மேலும் முதல்வர் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார். அதன் மூலம் 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் 10% கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிக்கு பெற்றோர் சார்பில் தனியார் ஆசிரியர் நியமனம் – மாணவர்கள் தோல்வி எதிரொலி!
மேலும் ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது திருமணமான ஊனமுற்ற மகன்/ மகளுக்கு மாதம் ரூ. 12,500 வரை ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திருத்தம் இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் (திருத்தப்பட்ட ஊதியம்) விதிகள், 2017ல் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. அதனால் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Join Our WhatsApp
Group” for Latest Updates