தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் நோ-பார்க்கிங் பகுதிகளில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
நோ-பார்க்கிங்
தமிழகத்தில் அவ்வப்போது நோ-பார்க்கிங் பகுதிகளில் பெரும்பாலானோர் தங்களின் கார்கள், இரு சக்கர மோட்டார் வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்துத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் நோ-பார்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முதலில் வடசென்னை பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திருவொற்றியூர் மண்டலத்தில் சட்டவிரோதமாக நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் கார்களில் நோட்டீஸ் ஒட்டும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது. மேலும் முதலில் தடவை நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நோட்டீஸ் மட்டுமே ஓட்டப்படுகிறது. முதல் முறையிலே அபராதம் வசூலிக்கப்படுவதில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் அதே வாகனம் நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டால் மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறையா? RBI விளக்கம்!
மேலும் அந்த வாகனம் அந்த வாகனம் கோட்டில் ஒப்படைக்கப்பட்டு விதியை மீறி செயல்பட்டதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது, சென்னை மாநகராட்சியில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பான பார்க்கிங் பகுதிகள் சென்னையில் 88 இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்