தமிழக காவல்துறையினருக்கான முக்கிய அறிவிப்பு – டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை!
தமிழக அரசு துறைகளில் இயங்கி வரும் முக்கியமான துறைகளில் ஒன்றாக காவல் துறை இருக்கிறது. இந்நிலையில் காவல் துறையில் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு அடிக்கடி ஒழுங்கு முறைகளை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி வருகிறார். அந்த வகையில் அவர் தெரிவித்த புதிய அறிவிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
காவல்துறைக்கு எச்சரிக்கை:
தமிழக காவல் துறை பொதுமக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வரும் உன்னதமான துறை ஆகும். கோவில் திருவிழாக்கள் முதல் பெரிய தலைவர்களின் பாதுகாப்பு வரை காவலர்களின் பணி முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் பல கிராமப்புற இளைஞர்களும் காவல் பணி வேண்டும் என அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் சிலர் சரியாக நடந்து கொள்வதில்லை என பல புகார்கள் வந்த நிலையில், மறுபக்கம் சிலருக்கு காவலர்கள் செய்யும் உதவிகளும் அதிகமாக பேசப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்கு காவலன் செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறை அதிகாரி டிஜிபி சைலேந்திரபாபு பதவி ஏற்றது முதல் இளைஞர்களிடம் சமூக வலைத்தளம் மூலமாக பேசி வருகிறார். மேலும் காவல் துறை பணியாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இதற்கு முன்னதாக காவலர்கள் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என ஸ்ட்ரிக்கர் ஒட்டுவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்திய ஓய்வூதியதாரர்களுக்கான அருமையான திட்டம் – மாதம் ரூபாய் 9,250 வரை ஓய்வூதியம்!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் பொதுமக்களிடம் காவலர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், ஒரு சில காவலர்கள் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற இறுமாப்புடன் சில காவலர்கள் நடந்து கொள்வதாக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை மூலமாக குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் அதில் உயரதிகாரிகளிடம் புகார் தர வருவோரை கேலி செய்வதும், துன்புறுத்துவதும் காவல்துறை பெயரைத்தான் கெடுக்கும் என அறிவுரை தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்