PM கிசான் யோஜனா திட்ட பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – கால அவகாசம் நிறைவு!

0
PM கிசான் யோஜனா திட்ட பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு - கால அவகாசம் நிறைவு!
PM கிசான் யோஜனா திட்ட பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு - கால அவகாசம் நிறைவு!
PM கிசான் யோஜனா திட்ட பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – கால அவகாசம் நிறைவு!

PM கிசான் யோஜனாவுக்கான eKYCஐ முடிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். பயனாளிகள் தங்கள் eKYC ஐ முடிக்க கூடுதல் கால அவகாசம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

PM கிசான் யோஜனா:

மத்திய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவுக்கான eKYC ஐ ஜூலை 31ம் தேதியான இன்றுடன் கடைசி நாளாகும். இ-கேஒய்சியை இன்னும் முடிக்காத பயனாளிகள் இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் அதை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். PM கிசான் யோஜனாவுக்கான eKYCஐ முடிப்பதற்கான கடைசி தேதி முன்னதாக மே 31 ஆக இருந்தது. ஆனால் பயனாளிகள் தங்கள் eKYC ஐ முடிக்க கூடுதல் அவகாசம் அளிக்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அரசு நீடித்து அனுமதி வழங்கியது.

Exams Daily Mobile App Download

அதன்படி, ‘அனைத்து PMKISAN பயனாளிகளுக்கும் eKYC இன் காலக்கெடு 31 ஜூலை 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி கிசான் யோஜனா அல்லது பிரதமர் கிசான் திட்டத்தின் 12வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், PM Kisan பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC ஐ அரசாங்கம் கட்டாயமாக்கியது. OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது. அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்காக அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் நிச்சயமா ஆகலாம் அரசு பள்ளி ஆசிரியர் – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க

PM Kisan e-KYC செயல்முறை வழிகாட்டி:
  • முதலில் pmkisan.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • பின்னர், ‘ஃபார்மர்ஸ் கார்னர்’ பிரிவின் கீழ் ‘eKYC’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ‘OTP அடிப்படையிலான eKYC’ பிரிவின் கீழ், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • ‘தேடல்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • OTP ஐ உள்ளிடவும்.
  • உள்ளிட்ட விவரங்களை வெற்றிகரமாகச் சரிபார்த்தவுடன் eKYC முடிக்கப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் ஒரு வருடத்தில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று சமமான தவணையாக ரூ.2000 கிடைக்கும். இதுவரை, பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் 11 தவணைகள் பயனாளிகளால் பெறப்பட்டுள்ளன. விரைவில் இந்த திட்டத்தின் 12வது தவணையை விவசாயிகள் பெற உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!