போட்டி தேர்விற்கு தயாராகுறீங்களா? தமிழக அரசு உங்களுக்கு கொடுத்துள்ள சூப்பர் சான்ஸ் – மிஸ் பண்ணிடாதீங்க!
அரசு வேலை பெறுவதை கனவாக கொண்டு பல இளைஞர்கள் தங்களை தயார் செய்து வருகின்றனர். போட்டி தேர்வில் வென்று அரசு வேலை பெரும் நோக்கில் பலர் கட்டணம் செலுத்தி வகுப்புகள் மூலம் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
கட்டணம் செலுத்தி தேர்வுக்கு தயார் ஆக முடியாதவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் இலவசமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
ரயில் பயணம் செய்ய போறிங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க.. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் தேர்வர்கள் www.civilservicecoaching.com என்னும் இணையத்தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 26.10.2022ம் தேதி வரை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிக்கு நேரிலோ அல்லது [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். இந்த இலவச பயிற்சி வகுப்பானது 29.10.2022ம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் நவம்பர் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 9865808127, 9894541118, 8667276684, 6381481895 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்