கர்நாடக மாநிலம் வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!
மராட்டிய மாநிலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு வருகை தருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ், ஓர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக அரசு:
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டி வந்தது. இதன் காரணமாக மாநிலத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு விதிக்கப்பட்டதன் விளைவாக தற்போது மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கு குறைவாக காணப்பட்டு வருகிறது.
ரயிலில் பயணிக்க கொரோனா தடுப்பூசி கட்டாயம் – தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு!
அதன்படி நேற்று (ஜூன் 29) மாநிலத்தில் 3,450 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக பிற மாநிலங்களான மராட்டியம் மற்றும் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு வரும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
தற்போது இதனை தடுக்கும் வகையில் மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மராட்டிய மாநிலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் மூலம் வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அல்லது முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து மாநிலத்தில் ஜூலை 5 முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.