ரேஷன் அட்டைத்தார்களுக்கு முக்கிய அறிவிப்பு – கார்டு ரத்து செய்யப்படுமா? ஆணையர் விளக்கம்!
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கு பயன்படுத்தி வரும் ரேஷன் கார்டு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. ரேஷன் கார்டு கூடிய விரைவில் ரத்து செய்யப்பட இருப்பதாக வெளியான தகவல் குறித்து தற்போது ஆணையாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ரேஷன் கார்டு
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
Exams Daily Mobile App Download
ரேஷன் திட்டம் மூலமாக நிறையப் பேர் உதவி பெற்று வருகின்றனர். அதே நேரம் வசதி படைத்தவர்களும் ரேஷன் மூலமாக உதவி பெற்று வருகின்றனர். ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து உத்திரபிரதேச மாநிலத்தில் மே மாதத்தில், தகுதியற்ற நபர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது ரேஷன் கார்டை ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – தேர்வு தேதி திடீர் மாற்றம்!
இது குறித்து அம்மாநில உணவுத்துறை ஆணையர் விளக்கமளித்துள்ளார். தகுதியற்றோர் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்பை அரசு வெளியிடவில்லை என்று மறுத்துள்ளார். இது போன்ற உத்தரவை பிறப்பித்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். சட்டம்-2013 ன்படி தகுதியில்லாத கார்டுதாரர்களிடம் இருந்து ரேஷன் கார்டை திரும்ப பெற எந்த விதியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து ரேஷன் அட்டைதாரர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.