ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொருட்கள் வாங்குவதில் சிக்கலா? தீர்வு இதோ!
தமிழக ரேஷன் அட்டதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. அதாவது இலவச உணவுத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எப்படி, எங்கே புகார் கொடுக்கலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முக்கிய அறிவிப்பு:
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாகக் கிடைக்கிறது. மலிவு விலையிலும் இலவசமாகவும் ரேஷன் கார்டு வைத்து உணவுப் பொருட்களை வாங்கலாம். மேலும் கொரோனா காலகட்டத்தில், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில், மத்திய அரசு ‘பிஎம் கரிப் கல்யாண் யோஜனா’ திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நிறையப் பேருக்கு உதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக எங்கே புகார் கொடுப்பது, யாரிடம் உதவி கேட்பது என்று பயனாளிகளுக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீங்களும் கரிப் கல்யாண் திட்டத்துக்கு தகுதியுடையவராக இருந்தும் இத்திட்டத்தின் பலனைப் பெற இயலவில்லை என்றாலோ, அல்லது இலவச ரேஷன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டாலோ, இப்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் எளிதாகப் புகார் செய்யலாம்.
1.புகார் கொடுப்பதற்கான இலவச எண்ணையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. கட்டணமில்லா எண்ணில் புகார் பதிவு செய்ய, 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை அழைக்க வேண்டும். அப்படியும் பலன் கிடைக்கவில்லை என்றால், உங்கள் அலுவலக முகவரிக்கு சென்று புகார் செய்யலாம்.
2. கட்டணமில்லா சேவை எண் இல்லாமல் இன்னும் இரண்டு எண்கள் உள்ளன. அவை 04325665566, 04428592828. இதுதவிர மின்னஞ்சல் மூலமாகப் புகார் தெரிவிக்க [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல, https://nfsa.gov.in/State/TN என்ற வெப்சைட் மூலமாகவும் நீங்கள் நேரடியாகப் புகார் கொடுக்கலாம்.