ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதனை’ செய்யாவிடில் கார்டு ரத்து!
இந்தியாவில் ரேஷன் கார்டு முக்கிய அடையாள ஆவணமாக விளக்குகிறது. மேலும் அரசின் சலுகைகளை பெற ரேஷன் கார்டு அவசியமாகிறது. இத்தகைய பயன்பாடுடைய ரேஷன் கார்டை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ரேஷன் அட்டைதாரர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அத்துடன் கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் அரசு மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கி வந்தது. அதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் பொருட்களை பெறலாம்.
திருப்பூரில் நாளை (ஜூலை 28) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தற்போது ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மத்திய உணவு வழங்கல் துறை மாற்றியமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி இனி தகுதியற்றவர்கள் ரேஷன் கார்டு மூலம் பயன் பெற முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ரேஷன் கார்டு மளிகை பொருட்கள் பெறுவது மட்டுமின்றி மத்திய மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவதற்கும் தேவைப்படுகிறது. மேலும் ரேஷன் கார்டு நாம் இந்த மாநிலத்தில் வசிக்கிறோம் என்பதற்கான இருப்பிட சான்றாகவும் கருதப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இத்தகைய பயனுள்ள ரேஷன் கார்டை பெற வாக்காளர் ஐடி, பான் கார்டு, பாஸ்போர்ட், குடும்ப உறுப்பினரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்கள் தேவை. இந்த அடையாளச் சான்றாக இல்லாவிட்டால், ரேஷன் கார்டு உங்களுக்கு கிடைக்காது மேலும் கார்டில் உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்க முடியாது.குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை பெற விரும்புவோர் மேற்சொன்ன ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டை பெற்று பயனடையலாம். இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.