தமிழக பொது மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – தகவல் வெளியீடு!
நிலத்தடி நீரை சட்டத்திற்குப் புறம்பாக நிலத்தடி நீர் ஆணையத்தில் முறையாகப் பதிவு செய்யாமலேயே பொதுமக்கள் வீட்டு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பை நிலத்தடிநீர் ஆணையம் வழங்கியுள்ளது.
நிலத்தடி நீர்:
தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும்பாலும் தங்களது வீட்டுத் தேவைகளுக்காக நிலத்தடி நீரை தான் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் பெரும்பாலான பொதுமக்கள் நிலத்தடி நீரை ஆணையத்தில் முறையாக பதிவு செய்யாமலேயே தங்களது வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு, இண்டஸ்டரியல், மொத்த தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள், குரூப் ஹவுசிங் சொசைடிகள், குடியிருப்பு அபார்ட்மென்ட்களுக்கான குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாடு ஆகியவற்றிற்காக நிலத்தடிநீரை பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக இன்றைக்கும் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பதற்கான முழுமையான அனுமதியையும் பெற்றிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நிலத்தடி நீரை எடுப்பதற்கான பதிவு கட்டணமாக ரூபாய் 10,000 செலுத்தி அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – இனி வீடு தேடி வரும் சேவை!
இதனையடுத்து மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் முறையான அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாநில நிலத்தடி நீர் ஆணையத்திடம் நிலத்தடி நீர் பயன்படுத்துவது குறித்தான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தடி நீர் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் உடனடியாக நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.