PM Kisan திட்ட பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதை’ செய்யாவிட்டால் பணம் வராது!
இந்தியாவில் விவசாயிகளை உதவும் வகையில் பிஎம் கிசான் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6000 வரை விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு இந்த உதவித்தொகை கிடைப்பதில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று விரிவாக பார்ப்போம்.
PM Kisan
இந்திய நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டம் மத்திய அரசால் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை என மொத்தமாக ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த உதவித்தொகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் சார்ந்த பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணை வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே 31ம் தேதி அன்று 11வது தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சுமார் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் ஒரு சில பயனாளிகளுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்காமல் இருக்க பல காரணங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வு தேதி குறித்த விவரம் இதோ!
1. முதலில் நீங்கள் தகுதியுடைய விவசாயிகளாக இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க பயனாளியின் பெயர் ஆதார் கார்டில் இருப்பது போன்று இருக்க வேண்டும்.
2. அடுத்ததாக பயனாளரின் முகவரியும் ஆதார் கார்டில் இருப்பது போன்று இருக்க வேண்டும். நீங்கள் முகவரியை மாற்றிருந்தால் முதலில் ஆதார் கார்டில் அப்டேட் செய்து விட்டு பிஎம் கிசான் கணக்கில் மாற்ற வேண்டும்.
3. இதையடுத்து பயனாளிகள் ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியமானதாகும். அத்துடன் ஆதார் கார்டு நம்பரை சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
4. மேலும் இத்திட்டத்தில் உள்ள வட மாநிலத்தவர்கள் தங்களின் பெயரை ஹிந்தியில் குறிப்பிடாமல் ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்.
5. இறுதியாக பயனாளிகள் தங்களின் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு வருகிற ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தவறுகளை தவிர்த்தால் உங்களின் கணக்கில் உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும்.