அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் வெளியீடு!
இந்தியாவில் ரேஷன் கார்டு விதிமுறைகளை அரசு மாற்றியுள்ளது. அதன்படி தற்போது தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதை தவிர்க்க ரேஷன் கார்டை ரத்து செய்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மற்ற மாநில ரேஷன் அட்டைதாரர்களும் பயோமெட்ரிக் முறையில் தாங்கள் வசித்து வரும் மாநில ரேஷன் கடைகளிலேயே அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய உணவு வழங்கல் துறை ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மாற்றி உள்ளது. அதன்படி இனி தகுதி பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற முடியாது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர் தனது சொந்த வருமானத்தில் 100 சதுர மீட்டர் பரப்பளவில் பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற முடியாது.
NPCIL நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மேலும் ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறுபவர்கள் ரேஷன் பெற தகுதி அற்றவர்களாக உள்ளனர். அவர்கள் தங்களது ரேஷன் கார்டை தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கவில்லை என்றால், ஆய்வுக்குப் பிறகு அத்தகையவர்களின் அட்டை ரத்து செய்யப்படும். அந்த குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தகுதி பெறாதவர்கள் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் மற்றும் அரசின் பிற சலுகைகளை பெற்று வருவது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.