அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆதாரை இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!
அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ரேஷன் அட்டையுடன், ஆதார் கார்டை இணைப்பது அவசியமாகும். அந்த வகையில் ஆதார் கார்டுடன் இணைக்க ஜூன் 30 வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாட தேவை பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். பொது மக்களின் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல தரப்புடைய ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மக்களும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன் பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் ”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்தியா முழுவதும் இடம் பெயர்ந்து வாழும் மக்கள் இந்த திட்டத்தின் மூலமாக அருகிலுள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைய முடியும். ரேஷன் கார்டுகள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அரசின் அடுத்தடுத்த நலத்திட்டத்தின் கீழ் பலன் பெற ரேஷன் கார்டுடன், ஆதார் அட்டையை கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும்.
இந்திய அணுசக்தி கழகத்தில் அருமையான வேலை – ITI தேர்ச்சி போதும்..!
2019 ஆம் ஆண்டிலேயே ரேஷன் கார்டுடன், ஆதார் அட்டையை இணைக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால், ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதில் சில சிரமங்கள் இருப்பதால் அவ்வப்போது ரேஷன் கார்டுடன், ஆதாரை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே மார்ச் 31 ஆம் தேதி வரை ரேஷன் கார்டுதாரர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பலரும் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்காமல் வைத்திருக்கும் காரணத்தினால் தற்போது ஜூன் 30 ஆம் தேதி வரை இணைக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.