அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இனி இலவச அரிசி & கோதுமை கிடையாது?
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன் அடைபவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளி வந்துள்ளது.
ரேஷன் கார்டு
இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக வினியோகிக்கப்படுகிறது. இதையடுத்து பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2020ம் ஆண்டு முதல் வழக்கமான ரேஷன் பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இது கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக இருக்கும். இதனை தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஜூன் மாதம் வரை மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனால் ஜூலை மாதம் வழக்கமான ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கு பதிலாக 1 கிலோ கோதுமை 2 ரூபாய் மற்றும் 1 கிலோ அரிசி 3 ரூபாய் என வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஆசிரியர் & மாணவர் பணியிட நிர்ணயம் – தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தின் கால அவகாசம் முன்னதாக முடிவடைந்த நிலையில் இதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையின் முடிவில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை என 3 மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் கோதுமை தட்டுப்பாடு காரணமாக 5 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அதன்படி அக்டோபர் மாதம் முதல் இத்திட்டத்தின் கீழ் பலன் கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்