அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – நேர மாற்ற விபரங்கள்!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, இன்று முதல் வங்கிக்கான வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த நேர மாற்றத்தை தெரிந்து கொள்ளுமாறு தெரிவித்து உள்ளனர்.
வங்கி நேரம்:
இந்திய நாட்டின் கருவூலமாக வங்கி இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. இந்த வங்கியின் மூலமாக பண நோட்டுகள் வெளியிடுவதை ஒழுங்குப்படுத்துதல், நிதியாதாரத்தை நிலையாக பாதுகாக்கும் வகையில் இருப்பினை கையாளுதல், வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், முறைசாரா நிதி நிறுவனங்களை மேற்பார்வையிட்டு கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன. அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்ற வங்கிகளை போல இந்த வங்கியை பணப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது. மேலும் இந்த வங்கிக்கு சென்னை, மும்பை, கொல்கத்தா, புதுதில்லி உள்ளிட்ட 4 மண்டலங்களும், நாடு முழுவதும் 22 கிளைகளும் உள்ளன.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரத்து செய்யப்பட்ட கார்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?
மேலும் இந்த வங்கி பல சிறந்த திட்டங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு சில நிமிடங்களில் கடன் வழங்கும் பல செயலிகள் தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ஒரு நொடியில் கடன்களை வழங்குகின்றன. ஆனால் கடனை திரும்பப்பெறும் போது இந்த செயலிகள் தங்கள் இஷ்டத்துக்கு பல அடாவடியான செயல்களையும் செய்கின்றன. அதனால் பயனாளர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய ஆர்பிஐ தற்போது ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் ஆர்பிஐ வங்கியை சார்ந்து இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளிலும் இன்று முதல் வங்கிகள் அனைத்தும் காலை 9 மணிக்கே திறக்கப்படும் என்று ஆர்பிஐ சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த நேர மாற்றத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆர்பிஐ தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது.