Post office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்திய அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிகளவு வடிக்கையாளர்கள் இணைகின்றனர். இந்த சேமிப்பு கணக்கை தொடங்கியவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
பான் எண் இணைப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்களில் இழப்பு ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் செலுத்தத் தொடங்கினர். இதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அதிகளவு லாபத்தை அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் பெற முடிகிறது. அத்துடன் இதில் ரூ.100 முதல் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும்.
TN Job “FB Group” Join Now
அஞ்சல் அலுவலகத்தில் 9 வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் குழந்தைகளின் எதிர்கால செலவினத்தை சுலபமாக எதிர்கொள்ள முடியும். இந்த திட்டங்களில் உள்ள ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளிட்டவை பொதுமக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இந்த சேமிப்பு திட்டங்களில் பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
சன் டிவி “தாலாட்டு” சீரியலில் களமிறங்கும் “செம்பருத்தி” சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!
இது குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், அஞ்சல் அலுவலகத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும், பான்கார்டு, மொபைல் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவுப்படி அனைவரும் இதனை கட்டாயமாக செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர் உடனடியாக அஞ்சலகத்தை தொடர்பு கொண்டு செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு இணைக்கவில்லையெனில் அந்த சேமிப்பு கணக்கில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது .