ரயில்களில் செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – பயண கட்டணத்தில் சலுகை! ஜூலை 1 முதல் அமல்!
ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு பயண கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கும் பயண கட்டண சலுகை வழங்க உள்ளதாக வதந்தி ஒன்று பரவி வருவதாக ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.
பயண கட்டண சலுகை
ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது பலவிதமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளி பயணிகள் ரயிலில் பயணிக்கும் போதும் அவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு மூத்த குடிமக்களுக்கும் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது.
Exams Daily Mobile App Download
கொரோனா பரவளின் காரணமாக கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. அதோடு இந்த மூத்த குடிமக்களுக்கான கட்டண சேவைகளும் அறவே நிறுத்தப்பட்டுவிட்டது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சேவையை ரத்து செய்வதும் அரசுக்கு கூடுதலாக 1,500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளது. அரசுக்கு இதனால் கூடுதல் வருமானம் கிடைத்ததால் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பாக அரசு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இந்நிலையில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை தொடங்க உள்ளதாகவும், இந்த கட்டண சலுகை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம், மூத்த குடிமக்களுக்கான சலுகையை அமலுக்கு வர உள்ளது என்கிற செய்தி முற்றிலும் வதந்தி என அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகை வழங்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.