ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – அதிக எடையுள்ள லக்கேஜ்களை கொண்டு சென்றால் கூடுதல் கட்டணம்!
ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் குறிப்பிட்ட எடையைக் காட்டிலும் கூடுதலாக உள்ள லக்கேஜ்களை ரயிலில் எடுத்து சென்றால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயிலில் கூடுதல் கட்டணம்:
எப்போதும் பேருந்துகளில் கூடுதல் லக்கேஜ்களை கொண்டு சென்றால் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது ரயில் பயணிகளும் கூடுதலாக லக்கேஜ் கொண்டு வந்தால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்களில் பயணிகள் கூடுதலாக லக்கேஜ்களை கொண்டு வந்தால் அவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறை கடந்த மே 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெரும்பாலும் ரயில் பயணிகள் அதிக எடையுள்ள பொருட்கள் மற்றும் மூட்டைகளை ரயில் பெட்டிகளில் அடைக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனால் சாதாரணமாக ரயில்களில் பயணிக்கும் பயணிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனர். சிரமத்தை குறைக்கும் வகையில் கூடுதலாக லக்கேஜ்களை கொண்டு வரும் ரயில் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ வரைக்கும், ஏசி2 டயர் படுக்கை முதல் வகுப்பில் 50 கிலோ வரைக்கும், ஏசி3 படுக்கை இருக்கையில் 40 கிலோ வரைக்கும், இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரைக்கும் லக்கேஜ்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொது வகுப்பில் பயணிக்கும் பயணிகள் 35 கிலோ வரைக்கும் லக்கேஜ்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை – தேவஸ்தானத்தின் அதிரடி அறிவிப்பு!
இதற்கு மேல் அதிக எடையுள்ள பொருட்களை ரயிலில் கொண்டு செல்லும்போது கூடுதல் கட்டணம் செலுத்தி தான் எடுத்து செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் லக்கேஜ்க்கான புக்கிங் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே புக்கிங் அலுவலகத்தில் சென்று பயணிகள் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால் ரயில் டிக்கெட் புக் செய்யப்படும் பொழுது அதற்கான கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கான கூடுதல் கட்டணத்தை செலுத்த தவறினால் கூடுதல் எடைக்கான அபராதத்தை செலுத்த வேண்டியிருக்கும். இது சாதாரண லக்கேஜ் கட்டணத்தை காட்டிலும் 6 மடங்கு கூடுதலாக இருக்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.