ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சகம் விளக்கம்!
நாட்டில் இயல்பு நிலை திரும்பி வருவதால் ரயில் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டிருந்த ரயில்களும் படிப்படியாக இயக்கப்பட தொடங்கி உள்ளது. இந்த நிலையில் டிக்கெட் கட்டணம் குறித்து எழுந்த சந்தேகத்திற்கு ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில் கட்டணம்:
இந்தியாவில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் மற்ற போக்குவரத்தை ரயில்களும் ரத்து செய்யட்டது. இதனால் ரயில்வேத்துறை பெரும் வருவாய் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.
இத்தகைய சூழலில் ரயில்கள் இயக்கப்படாதாது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. அதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மீண்டும் ரயில்கள் இயக்கப்பட தொடங்கியது. தற்போது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு உள்ளது போல முன்பதிவில்லா ரயில்களும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரயில்வே துறை பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு ஈடான கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் பரவி வந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் – நாளை (ஆக.22) டோக்கன் வெளியீடு!
Exams Daily Mobile App Download
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட பதிவில் ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு தனி பெர்த் அல்லது இருக்கை வழங்கப்படமாட்டாது. 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தனி பெர்த் அல்லது இருக்கை வேண்டும் என்றால் அதற்காக முழு தொகையை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்