ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – 6 முக்கிய புறநகர் சேவைகள் ரத்து!
தமிழகத்தில் சென்னை – கூடூர் பிரிவில் உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் முக்கியமான 6 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் சேவை ரத்து:
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் அனைத்து ரயில் சேவைகளும் துவங்கப்பட்டு பயணிகள் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். அதாவது, பேருந்துடன் ஒப்பிடும் போது ரயில் பயணத்திற்கு குறைவான அளவே செலவாகும் என்பதால் பலரும் ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். மேலும், ரயிலில் கழிப்பறை வசதி இருக்கும் என்பதாலும் பலரும் ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர். அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் ரயில் சேவைகளில் சில மாற்றங்களை அறிவித்து வருகிறது.
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ ஷபானா ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வெள்ளித்திரையில் என்ட்ரி!
இதனிடையே, தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை குறைத்து ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும், ஏசி பெட்டிகளின் விலை தூங்கும் வசதி கொண்ட படுக்கையின் விலையை விட பல மடங்கு அதிகம் என்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
Exams Daily Mobile App Download
இதனிடையே, சில முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை – கூடூர் பிரிவில் உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காட்பாடி – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள சில முக்கிய ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை – கூடூர் பிரிவில் உள்ள 6 முக்கிய புறநகர் ரயில் சேவைகள் வரும் ஜூலை 19 ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், காலை 10.15 மணிக்கு புறப்படும் நெல்லூர் – சூளூர்பேட்டை புறநகர் ரயில் (06746) ரத்து செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.