TNPSC Group 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்னும் 2 நாட்களே கால அவகாசம்!
TNPSC குரூப்4&VAO தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விரைந்து தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரூப்4&VAO:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது 5831 காலிப்பணியிடங்களை கொண்டுள்ள குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அதிக தேர்வர்கள் எதிர்பார்க்க கூடிய குரூப்4&VAO தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது.
Exams Daily Mobile App Download
இந்த குரூப்4 தேர்வு கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வெளியான அறிவிப்பில் 7,301 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் அவை தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு ஆகும். மேலும் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இத்தேர்வை எழுதலாம். தற்போது விண்ணப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? ஏப்ரல் 27 இல் பிரதமர் எடுக்கப்போகும் முடிவு!
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட காலத்தின் படி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்4&VAO தேர்வானது ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிடத்தக்கது.