TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு முக்கிய அறிவிப்பு – காலிப்பணியிட விபரங்கள்!
குரூப் 4 தேர்வின் மூலமாக கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் முதலான பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளனர். தற்போது ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளன என்பது குறித்தான அனைத்து தகவலும் வெளியாகியுள்ளது.
குரூப் 4 தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு துறைகளுக்கான பணியிடங்களை நிரப்ப குரூப் 2, குரூப் 4 முதலான தகுதித் தேர்வுகளை நடத்தி வருகின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் தகுதி தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. அதாவது குரூப் 4 தேர்வு ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் எனவும், ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் தேர்வுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மேலுள்ள எண்களின் அர்த்தம் என்ன? முழு விவரம்!
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தமாக 7,301 காலிப் பணியிடங்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளதால் எக்கச்சக்கமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொண்டிருக்கின்றனர். தற்போது ஒவ்வொரு பணிகளுக்கும் எத்தனை காலிப் பணியிடங்கள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரத்து – அமைச்சரின் விளக்கம்!
கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணிக்கு 274 காலிப் பணியிடங்களும், இளநிலை உதவியாளர் பணிக்கு 3,681 காலிப் பணியிடங்களும், பில் கலெக்டர் பணிக்கு 50 காலிப் பணியிடங்களும், தட்டச்சர் பணிக்கு 2,108 காலிப் பணியிடங்களும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 1,024 காலிப் பணியிடங்களும், ஸ்டோர் கீப்பர் பணிக்கு ஒரு காலிப் பணியிடமும் உள்ளது. மேலும், வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு 163 காலிப் பணியிடங்கள் உள்ளன.