TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தடுப்பூசி கட்டாயம்!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2207 பணியிடங்களுக்கு வருகிற பிப். 12 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. அந்த தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தடுப்பூசி கட்டாயம்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக போட்டித்தேர்வுகள் பல ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல போட்டித்தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய நாளை மறுநாள் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வானது ஆசிரியர் கல்வி வாரியமான டி.ஆர்.பி. சார்பில் இந்த தேர்வு கணினி வழியில் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!
மாநிலம் முழுவதும் 160 முதல் 180 வரை தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை எழுத மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்து அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் இந்த தேர்வுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.21 வரை இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
தடுப்பூசி செலுத்தாதவர்கள் தேர்வு நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா சோதனை செய்த சான்றிதழ் எடுத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு பள்ளிக்கல்வி துறை மற்றும் டி.ஆர்.பி.க்கு தேர்வர்கள் மின்னஞ்சல் மூலமாக கோரிக்கை அனுப்பி இருக்கின்றனர். இதற்கு முன்னால் நடத்தப்பட்ட தேர்வுகளில் இது போல எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.