TCS, Wipro, HCL Tech நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சம்பள உயர்வு & WFH திட்டங்கள்!
ஐடி நிறுவனங்கள் தங்களது திறமைவாய்ந்த ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்டவைகளை வழங்கி வருவது வழக்கம். தற்போது TCS, Wipro, HCL Tech நிறுவன ஊழியர்கள் நடப்பு நிதியாண்டில் அறிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.
ஐடி நிறுவனங்கள்:
கொரோனா காலகட்டத்தில் பிற துறைகள் ஸ்தம்பித்து கொண்டிருந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் அசுர வளர்ச்சியை அடைந்தன. இதனால் ஏராளமான புதிய பணியாளர்களை பணியில் சேர்க்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. மேலும் ஏற்கனவே பணிபுரியும் திறமை வாய்ந்த ஊழியர்களை தக்கவைக்கவும் சில நடவடிக்கைகளை எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. அந்த வகையில் விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வு மற்றும் அடுத்த மாதம் முதல் சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் தீவிரமாய் பரவும் விசித்திர நோய் – அச்சத்தில் பொதுமக்கள்!
இது தவிர TCS, HCL Tech உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் போனஸ், ஊதிய திருத்தங்கள் மற்றும் சம்பள உயர்வுகளை வழங்குகின்றன. மறுபுறம் வீட்டில் இருந்தே வேலை செய்து குறித்த சில தகவல்களும் வெளியாகி உள்ளது. அதன்படி சில நிறுவனங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்கின்றன. ஆனால், நீண்ட காலத்திற்கு பெரும்பாலான நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலை பின்பற்ற திட்டமிட்டு உள்ளன. ஜூன் 2022 காலாண்டில், டிசிஎஸ்-ன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.9,478 கோடியாக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
விப்ரோ அதன் ஜூன் 2022 காலாண்டு லாபம் ரூ. 2,563 கோடியாக உள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 20.9 சதவீதம் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. HCL டெக்னாலஜிஸ் ஜூன் 2022 காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 2.4 சதவீதம் உயர்ந்து ரூ.3,283 கோடியாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.3,218 கோடியாக இருந்தது.