தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – காவல்துறை எச்சரிக்கை!
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை காவல்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பையும் மீறி மாணவர்கள் தவறு செய்தால் அந்த மாணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
காவல்துறையின் எச்சரிக்கை
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அந்த மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கடந்த 20ம் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றனர். அதே போல கல்லூரி இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரம் – டிஜிபி சைலேந்திர பாபு புதிய உத்தரவு!
பள்ளிகள் திறக்கப்பட்டதுமே கல்லூரி மாணவர்கள் தங்களது சேட்டைகளை நடத்த ஆரம்பித்துவிட்டனர். அதாவது, சென்னை கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி பஸ் டே கொண்டாடினர். இது பொது மக்களுக்கு மிகவும் இடையூறாக இருந்ததாக குற்றசாட்டு வைக்கப்பட்டன. இதனால், மாணவர்களை போலீசார் அறிவுரை வழங்கி கல்லூரிக்கே அனுப்பிவைத்து விட்டனர். மேலும், கல்லூரிக்கு அருகில் சுற்றி திரிந்து கொண்டிருந்தவர்களையும் அவ்வழியே வந்த பேருந்தில் ஏற்றி கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இது போல பொது மக்களுக்கு இடையூறாக இருந்தாலோ அல்லது ஏதேனும் வன்முறை கலவரத்தில் ஈடுபட்டாலோ அல்லது பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்துகொண்டலோ சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், மாணவர்கள் இது போல ஒழுங்கீனத்தில் ஈடுபடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.