தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அறிவுரை!
தமிழக ரேஷன் கடைகளில் மலிவான விலையில் உணவு பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டுறவு சங்க ஊழியர்களுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
ரேஷன் கடை
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ரேஷன் கடைகளில் அவ்வப்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இக்கூட்டத்தின் முடிவில் அமைச்சர் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்களின் எடை சரியானதாகவும் அத்துடன் தகுந்த எடையுடன் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் ரேஷன் கடை ஊழியர் முறைகேடு செய்து அந்த தொகையை திரும்ப செலுத்தினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் இருப்பதால் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – சேவைகள் துவக்கம்!
இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வசதி படைத்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை கள பணியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை ஆய்வு செய்த பிறகு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் ரேஷன் கடைகளுக்கு வரும் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக பொருட்கள் வழங்க வேண்டும். மேலும் உணவு, அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.