தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு – 150 கார்டுகளுக்கு தனி கடை! அமைச்சர் பேட்டி!
தமிழக ரேஷன் கடைகளில் மலிவான உணவு பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை ஐ.பெரியசாமி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
ரேஷன் கடைகள்
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் வழங்கப்பட்டது. மேலும் தற்போது பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பண்டிகை அரசின் சலுகைகள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் ஐ.பெரியசாமி கூறியதாவது, தமிழக ரேஷன் கடைகளில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதனால் இனி ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை திரும்பி ரேஷன் கடைகளில் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரேஷன் கடைகளில் தரையில் சிதறிய அரிசி உள்ளிட்ட பொருட்களை மீண்டும் விநியோகம் செய்ய கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
முகக்கவசம் அணியவில்லையெனில் ரூ.500 அபராதம் – அரசு திடீர் அறிவிப்பு
இதனை தொடர்ந்து மேலும் 2 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நல்ல அரிசி வழங்கப்பட வேண்டும் என்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது 150 கார்டுகளுக்கு தனியாக பகுதிநேர கடை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இது கிராமப்புற மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்துபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தப்படி கூட்டுறவுத்துறை செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.