தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் புதிய உத்தரவு!
தமிழகத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் வசதி படைத்த நபர்கள் ரேஷன் பொருட்களை வாங்குகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றனர். இந்த ரேஷன் கடைகள் மூலமாக சுமார் 2.22 கோடி அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சக்கரை, கோதுமை என அனைத்தும் மாதந்தோறும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் தரமான பொருள்கள் வழங்குவது குறித்து உணவுத்துறை சார்பில் அடிக்கடி அறிவிப்பு வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொருள்கள் விநியோகம் செய்வது குறித்து முக்கிய அறிவிப்பை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ளார். அதில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் வசதி படைத்த நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக இளங்கலை கலை & அறிவியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு – அறிக்கை வெளியீடு
இதற்கு முன்னதாக ரேஷன் கடைகள் சேதமடைந்து இருந்தால் அதனை சரி செய்வது குறித்த அறிவிப்பு வெளியானது. சேதமடைந்த கடைகளில் சீரமைப்பு பணிகளை செப்.15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்தும் அரிசி, பருப்பு கீழே விழுந்தால் அதனை மீண்டும் மக்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.