தமிழக ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு அரசு சார்பாக ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிப்பது தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மகப்பேறு விடுமுறை :
தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு ஆரம்பத்தில் ஊதியத்துடன் 6 மாத காலம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஊழியர்கள் பிரசவத்திற்கு பின், முன் என பிரிந்து எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகப்பேறு விடுமுறை 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கலின் போது அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி அறிவித்தது. இதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டது.
மேலும் குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்தாலும் ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் அரசு ஊழியர்களை போல ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. இதனை அதிகரிக்க கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 365 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஊழியர்களுக்கான DA உயர்வு குறித்த அறிவிப்பு – தகவல் வெளியீடு!
Exams Daily Mobile App Download
இது குறித்து கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க தேவையான துணை விதி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்