தமிழக காவல்துறையினருக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!

0
தமிழக காவல்துறையினருக்கு முக்கிய அறிவிப்பு - டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!
தமிழக காவல்துறையினருக்கு முக்கிய அறிவிப்பு - டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!
தமிழக காவல்துறையினருக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கலவரம் ஏற்படும் சமயங்களில் துரிதமாக செயல்படும் பொருட்டு தமிழகத்தில் உள்ள ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் இளம் காவலர்களுக்கு ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை கவாத்துப் பயிற்சி வழங்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

காவல் துறை:

தமிழகத்தில் காவல்துறை மக்களுக்கு சிறப்பான சேவைகளை ஆற்றி வருகிறது. இதே போல் தமிழக அரசும் மக்களுக்கு சரியான நேரத்தில் காவல்துறை உதவி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் பணி நிமித்தமாக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இப்பயிற்சியில் ஆயுதப்படை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்கள் கலவர சம்பவங்களில் படையை வழி நடத்த அவ்வப்போது உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆயுதப்படையில் கேடயம், லத்தி, ரப்பர் தோட்டாக்கள், பிளாஸ்டிக் தோட்டாக்கள், பம்ப் ஆக்சன் கன், கேஸ் கன், கேஸ் செல்கள் போன்றவைகள் சரியாக வேலை செய்கிறதா என்று கண்காணித்து உரிய பயிற்சி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய தகவல் வெளியீடு!

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் விநாயகர் சதுர்த்தி தினம் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலங்கள் நாடு முழுவதும் நடத்தப்படும். அந்த சமயத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக கூட வாய்ப்பு இருப்பதால் எந்த நேரத்திலும் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே நகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களை தயார் நிலையில் வைத்து முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு உட்படுத்த அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!