தமிழக ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வாழ்நாள் சான்றிதழ் வழங்க காலக்கெடு!
ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வாழ்நாள் சான்றிதழை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்நாள் சான்றிதழ் :
தமிழகத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் தமிழக அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு முக்கிய ஆதாரமாக வாழ்நாள் சான்று செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர் சமர்ப்பித்தால் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், கொரோனா நெருக்கடி சமயங்களில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, 2022ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாழ்நாள் சான்றிதழை எவ்வாறு சமர்ப்பிப்பது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக சமர்ப்பிப்பது எவ்வாறு என்பது குறித்தான முழு வீடியோவையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, இந்திய தபால் துறை வங்கி (India post payments bank) சேவை மூலமாக ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக 70 ரூபாய் செலுத்தி வாழ்நாள் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 39 லட்சம் வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
மேலும், உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்களிலும் வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான கட்டணத்தை செலுத்தி ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலி (jeevan pramaan face app) மூலமாகவும் ஆன்லைன் வழியாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். மேலும், ஆன்லைன் வழியாக வாழ்நாள் சான்றிதழை பெற ஆதார் எண், PPO எண், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்கள் தேவைப்படுகிறது. பதிவு செய்த பிறகு ஓய்வூதியதாரர்கள் https://www.tn.gov.in/karuvoolam/ என்கிற இணையதள பக்கத்தில் இருந்து வாழ்நாள் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.