தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ.50 செலுத்தி தேசியக்கொடி பெற உத்தரவு!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.50 செலுத்தி தேசியக்கொடி பெற உத்தரவு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ.50 செலுத்தி தேசியக்கொடி பெற உத்தரவு!

75 வது சுதந்திர ஆண்டை இந்தியா கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில்,ரூ.50 செலுத்தி தேசியக்கொடியை பெற்று அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு:

இந்தியாவில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவமாக கொண்டாடும் ஒரு நிகழ்வு என்றால் அது சுதந்திர தின விழா தான். நாட்டின் 75 வது சுதந்திர தின விழா, நாடு முழுதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை, திருவிழாவாக ஒவ்வொரு வீடுகளிலும் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.’இல்லந்தோறும் மூவர்ணம்’ எனும் பிரசாரத்தை, மத்திய அரசு துவங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாடு முழுதும் தேசியக் கொடிகளை விற்கும் பணி, அஞ்சல் துறைக்கு வழங்கப் பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை நகர மண்டலங்களில் உள்ள அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஒரு தேசியக் கொடியின் விலை 25 ரூபாய். தேசிய கொடியை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்க பொதுமக்கள், நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.epostoffice.gov.in என்ற வலைதளத்திலும் ஆர்டர் செய்து, ஆன்லைன் வாயிலாகவும் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளர். அந்த அறிக்கையில், இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவளவிழா ஆண்டை அனைவரும் கொண்டாட 10.08.22 அன்று பிற்பகல் 2 மணிக்கு முதன்மை கல்வி அலுவலகத்தில் தேசிய கொடியை பெற்றுக்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தேசிய கொடி EMIS இணையத்தளத்தில் உள்ள தங்கள் பள்ளியின் ஆசிரியர்களின் எண்ணிக்கைப்படி, பெறப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் (பகுதி நேர ஆசிரியர்களை தவிர) அனைவரின் எண்ணிக்கைக்கேற்ப (ஒரு கொடியின் விலை – 50) தொகையை செலுத்தி பெற்று கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி, தேசிய கொடியை அரசு விதிகளுக்குட்பட்டு ஆகஸ்ட் 11 முதல் 17 வரை வீடுகளில் ஏற்றி அதன் புகைப்பட நகலினை ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்து பெற்று கரூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர், திட்ட ஒருங்கிணைப்பாளர், மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!