கள்ளக்குறிச்சி பள்ளி மாணவ & மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வெளியீடு!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்து பள்ளி வன்முறை கும்பலால் சூறையாடப்பட்டது. இந்நிலையில் அதே பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
கடந்த சில நாட்களாக தமிழக மக்களை திரும்பி பார்க்க வைத்த சம்பவம் தான் கள்ளகுறிச்சி சக்தி பள்ளி மாணவி தற்கொலை சம்பவம். ஜூன் 13 ஆம் தேதி இறந்ததாக தெரிவிக்கப்பட்ட மாணவியின் உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் நீதிக்காக பெற்றோர்கள் போராடி வருகின்றனர். கடந்த ஜூலை 17 ஆம் தேதி ஸ்ரீமதிக்கு நியாயம் கேட்டு போராடிய நிலையில் அது இறுதியில் வன்முறையாக மாறியது. வன்முறையாளர்கள் சக்தி பள்ளியை அடித்து நொறுக்கினார்கள் .
Exams Daily Mobile App Download
அதில் அந்த பள்ளி வளாகம் முழுவதும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் பள்ளி வாகனம் முழுவதும் எரிக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டது. உடனே வந்த போலீசார் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தார்கள். அப்போது பல போலீசாருக்கு அடிபட்டது. இது குறித்து வழக்கு ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பள்ளியில் படித்த மாணவ மாணவிகளின் நிலைமை என்ன ஆகும் என பெற்றோர்கள் சிலர் பேட்டி அளித்தனர்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை !
இந்நிலையில் அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்திடவும், வகுப்பு துவங்குவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.