மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 7வது ஊதிய குழுவின் பரிந்துரை!
இந்தியாவில் ராஜஸ்தான் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் அடிப்படையில் பென்ஷன் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பென்ஷன்:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா தாக்கத்திற்கு பிறகு கடந்த ஆண்டு முதல் அகவிலைப்படி 2 கட்டமாக உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது அகவிலைப்படி 31% ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயரும் என்றும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி 2022 ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆட்சியர் முக்கிய உத்தரவு!
இதனால் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வீட்டு வாடகை படி மற்றும் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை ஒரே தவணையில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மாநில அரசுகள் ஒவ்வொன்றாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலமும் அரசு ஊழியர்களுக்கு பழைய அகவிலைப்படி தொகையை நடைமுறை படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள், வாரிய ஊழியர்கள், தன்னாட்சி அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.