சிறு, குறு வணிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகர்களை உறுப்பினர்களாக சேர்த்திட மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
உறுப்பினர்கள்:
வணிகா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை குறித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நேற்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, 1989- ஆம் ஆண்டில் வணிகர் நல வாரியம் உருவாக்கப்பட்டது. இன்று வரை தங்கு தடையின்றி செயல்பட்டு வருகிறது என கூறியவர் உறுப்பினர்களாக வலியுறுத்தினார்.
தமிழக போக்குவரத்து கழகத்தில் அதிகாரிகள் பணிநீக்கம்? போலி சான்றிதழ் எதிரொலி!
குறைந்த அளவிலான உறுப்பினர்களுடன் தற்போது வரை செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. தற்போது வணிகர் நல வாரியதினை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும் இந்த வாரியத்தில் உறுப்பினராக இணைய சேர்க்கை கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வந்தது. வாரியதினை மேம்படுத்தும் நோக்கில் அக்டோபர் 14ம் தேதி வரை சேர்க்கை கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதனை பயன்படுத்தி வணிகர்களை உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும் எனவும் அனைத்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். இயற்கை பேரிடர் காலங்கள், பொருளாதார பிரச்சனைகள் போன்றவற்றின் போதும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற உறுப்பினராக இருப்பது அவசியம். வாரிய உறுப்பினர்கள், மருத்துவம், குடும்ப நல உதவி, கல்வி, விளையாட்டு உதவிகள் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன எனவும் மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கோரியுள்ளார்.