பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூலை 8 வரை விடுமுறை! அரசு திடீர் அறிவிப்பு!
இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஓரளவிற்கு எரிபொருளின் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு வரும் ஜூலை 8 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
இலங்கை எந்தாண்டும் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பெரிய அளவில் நிலக்கரி தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் இலங்கை மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே தான் செல்கிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்தும் தேவையான நிலக்கரி கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் வரைக்கும் இந்த தட்டுப்பாடு நிலவத் தான் செய்யும். இதனால் போதுமான பெட்ரோல் கிடைக்காமல் மணிக்கணக்கில் பெட்ரோல் இல்லாமல் பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதுமட்டுமல்லாமல், இலங்கையில் காய்கறிகளின் விளைச்சல் கூட இல்லாமல் அன்றாட உணவிற்கே தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதனால், சுயமாகவே ஒவ்வொருவரின் வீட்டிலும் காய்கறி தோட்டத்தை அமைக்க அரசு ஊக்குவித்து கொண்டிருக்கிறது. மேலும், உணவிற்கும் வழியில்லாமல், எரிபொருட்களின் உற்பத்தியும் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், எரிபொருள் இல்லாமல் பொது போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கும் பெட்ரோல் தட்டுப்பாட்டை குறைக்க அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு கூட தேவையான எரிபொருள் இல்லாமல் சிரமத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பெட்ரோல் தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளிக்க நேற்றில் இருந்து வரும் ஜூலை 8 ஆம் தேதி வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒரு வாரத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்யவும், ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி பேருந்துகள் இயங்காது என்பதால் ஓரளவிற்கு எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்கவும் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.