SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பணமோசடி எச்சரிக்கை!
வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்களின் கணக்கு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம். பண மோசடி செய்யும் நபர்கள் நுாதன முறையை பின்பற்றி பணம் கையாடல் செய்கின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி வங்கியாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
பண மோசடி:
இந்தியாவில் வங்கி சேவை அத்தியாவசிய ஒன்றாக உள்ளதால் ஊரடங்கு காலத்திலும் குறிப்பிட்ட நேரம் வரை குறைந்த பணியாளர்களை வைத்து வங்கிகள் செயல்பட்டு வந்தது. மேலும் மக்கள் முடிந்தளவு வெளியில் வராமல் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் வங்கி வேலைகளை முடிக்க அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் அனைத்து வங்கிகளும் தங்களுக்கென்று இணையதளங்களையும், வங்கி செயலிகளையும் உருவாக்கி அதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் போலி இணையதளங்களை உருவாக்கி முறைகேட்டில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் மீண்டு வரும் வேலைவாய்ப்புகள் & ஊதிய உயர்வு – கணக்கெடுப்பு தரவு தகவல்!
இது குறித்து அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரித்து வருகிறது. வங்கி கணக்கு, டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள், ஓ.டி.பி.,யை யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று வாடிக்கையாளர்களுக்கு வங்கி அறிவுறுத்தி வருகிறது. மோசடி செய்யும் கும்பல் ஸ்டேட் வங்கியில் இருந்து அனுப்புவது போலவே ‘வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது, இப்போதே இணைய வங்கியை லாகின் செய்து, கே.ஒய்.சி.,ல் பான் கார்டு விவரங்களை இணையுங்கள்’ என குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். மேலும் ஒரு லிங்க்ஐ அனுப்பி இதை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்ய சொல்கின்றனர்.
பெண்களின் திருமணத்திற்கு உகந்த LIC பாலிசி – ரூ.27 லட்சம் வரை பெறலாம்!
இந்த லிங்க் எஸ்.பி.ஐ., ஆன்லைன் என்கிற பெயரில் ஹேக்கர்கள் உருவாக்கி வைத்துள்ள இணையதளத்திற்குள் செல்கிறது. இந்த லிங்கில் நெட் பேங்கிங்க் யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு பதிவிட சொல்கிறது. இவர்களை நம்பி வங்கி பயனர்களும் எண்களை பதிவிடுகின்றனர். இவற்றை வைத்துக் கொண்டு மோசடி செய்யும் நபர்கள் சுலபமாக வங்கி கணக்கிலிருந்து தொகையை எளிதாக எடுத்து விடுகின்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டுமென வங்கியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.