ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இனி இலவச பொருட்கள் கிடையாது!
ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து விலை கொடுத்து தான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருள்:
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் கடை பொருட்களும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ரேசன் கார்டு திட்டங்களில் பல்வேறு விதிமுறைகளும் புகுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கார்டு விதிமுறைகள் சில மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிய அறிவிப்புகளின் படி ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு தானியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காலகட்டத்தில் இருந்தே பிரதான் மந்திரி கரிப் அண்ணா கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பிறகு ரேஷன் பொருட்களுக்கு விலை கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை – குஷியில் ரசிகர்கள்!
ஒரு கிலோ கோதுமைக்கு 2 ரூபாயும், ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரேஷன் வினியோக அட்டவணை இரண்டு மாதங்கள் தாமதமாக நடக்கிறது. இந்நிலையில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படாது எனவும், அரிசி, கோதுமை போன்ற பொருட்களுக்கு விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Super super happy