ரேஷன் அட்டைத்தார்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!
நாடு முழுவதும் மக்கள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை மாதந்தோறும் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தகுதியற்றவர்கள் பயன் பெற முடியாத வகையில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் வீட்டு மளிகை பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் திட்டமானது ஏழை எளிய வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் இதில் வசதி படைத்தவர்களும் பயன் பெற்று வருவது கண்டறியப்பட்டது.
Exams Daily Mobile App Download
இவர்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதனால் தகுதி உள்ளவர்களுக்கு சலுகைகள் கிடைக்காமல் போய் விடுகிறது. இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது ரேஷன் கார்டு விதிமுறைகளை மாற்ற முடிவு செய்து வருகிறது. இந்த விதிமுறையானது தகுதி அற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது. அந்த நடவடிக்கை என்னவென்றால் தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளியில் காவல்துறை சிறப்புக்குழுக்கள் தீவிர விசாரணை – அறிவிப்பு வெளியீடு!
அதனால் இனி குடும்ப வருமானம், வசதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியுடையவர்களுக்கு மட்டும் இனி ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இந்த புதிய ரேஷன் கார்டு விதிமுறை படிப்படியாக கொண்டு வரப்பட்டு வருகிறது. இது முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், 100 சதுர அடிக்கு மேல் வீடு வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துவோர், வீட்டில் ஏசி, ஜெனரேட்டர் உபயோகப்படுத்துபவர்கள் குடும்ப வருமானம் ஆண்டுக்கும் ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது என்கின்றனர்.