ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு!
நாடு முழுவதும் மக்கள் மலிவு விலையில் பொருள்கள் வாங்குவதற்கும், முக்கிய அடையாள அட்டையாகவும் ரேஷன் கார்டுகள் இருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டை உடன் இணைக்க ஜூன் 30 கடைசி நாள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டுகள்:
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பல ரேஷன் கார்டுகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றனர். ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் பொருள்களை ரேஷன் கடைகள் வழங்குகின்றன. மேலும் PM Awas Yojana, PM Garib Kalyan Anna Yojana மற்றும் பிற திட்டங்கள் மூலமாக கிடைக்கும் பலன்கள் அனைத்தும் ரேஷன் கார்டுகள் மூலமாகவே மக்களை சென்றடைகின்றன. கொரோனா காலத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக மக்களுக்கு பல நிவாரணம் வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அப்போது போலி ரேஷன் கார்டுகள் எண்ணிக்கை அதிகமானது. போலி ரேஷன் அட்டைகள் மூலமாக மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பல சென்று அடையாமல் இருக்கிறது. அதனால் போலி ரேஷன் அட்டைகளை தடுக்க நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைய ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் ஆகும்.
தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!
அவ்வாறு இணைப்பதன் மூலமாக குடும்ப உறுப்பினர்கள் எந்த இடத்தில் இருந்தும் ரேஷன் மூலமாக பொருள்களை வாங்கி கொள்ளலாம். கைரேகை மூலமாக பதிவு செய்து பொருள்கள் வழங்கப்படும். அதனால் முறைகேடுகள் தடுக்கப்படும். இந்நிலையில் ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது கடைசியாக ஜூன் 30 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் அட்டைகளை ஆதார் அட்டை உடன் இணைக்காத மக்கள் உடனே சென்று இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.