ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய ரயில் சேவைகள் துவக்கம்!
நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால், கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய அனைத்து வித ரயில் சேவைகளும், பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் தற்போது வாராந்திர சிறப்பு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில் குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதிய ரயில் சேவை:
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கும் உதவும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள ரயில் போக்குவரத்து சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் ரயில் பயணத்தில் தான் படுத்துத் தூங்கிக்கொண்டே நிம்மதியாகப் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இருப்பினும் கொரோனா பேரிடர் காலத்தில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இன்று முதல் 5 நாட்கள் இணையதள சேவை முடக்கம் – மணிப்பூர் அரசு உத்தரவு! அச்சத்தில் பொதுமக்கள்!
தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளதால், அனைத்து ரயில் சேவைகளும் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அண்மையில் அறிவித்து. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியது “கீழ்க்கண்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படுகிறது, அதாவது திருநெல்வேலி-தாம்பரம் (வண்டி எண்:06004) இடையே இரவு 7 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 7ம் தேதி, 14ம் தேதி, 21- ம்தேதி , 28-ம்தேதி மற்றும் செப்டம்பர் 4-ந் தேதிகளில் இயக்கப்படும்.
Exams Daily Mobile App Download
மறுமார்க்கமாக தாம்பரம்-திருநெல்வேலி (06003) இடையே இரவு 10.20 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி, 15ம் தேதி, 22-ந் தேதி, 29-ந் தேதி மற்றும் செப்டம்பர் 5-ந் தேதிகளில் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில்,திருநெல்வேலி டு சென்னை தாம்பரத்திற்கு இன்று (ஆகஸ்ட் 7-ந் தேதி) முதல் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சேரன்மகாதேவி, அம்பை,தென்காசி, மதுரை வழியாக காலை 9.20 மணிக்கு சென்னை தாம்பரத்திற்கு சென்றடையும். மறுபக்கத்தில் திங்கள் ( ஆகஸ்ட் 8ம் தேதி) இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை, தென்காசி, சேரன்மகாதேவி வழியாக காலை 10.40க்கு திருநெல்வேலி சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.