பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 4 முதல் புது விதிமுறை!

0
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் 4 முதல் புது விதிமுறை!
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் 4 முதல் புது விதிமுறை!
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 4 முதல் புது விதிமுறை!

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. பாசிட்டிவ் பேமண்ட் முறை (PPS) திட்டத்தை எஸ்பிஐ வங்கி போலவே அமல் படுத்த முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு:

நாடு முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் பல வங்கிகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாசிட்டிவ் பேமண்ட் முறை (PPS), அதாவது காசோலை மூலமாகப் பணம் செலுத்துவது சரிபார்ப்புக்கு பின்பு தான் ஆக்டிவேட் செய்யப்ப்படும் என்ற முறையை எஸ்பிஐ மற்றும் பாங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகள் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன. தற்போது அவர்களது வரிசையில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் இந்த திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழக சமூக நலத்துறையில் முக்கிய வேலை வாய்ப்பு – மாதம் பிறந்தால் ரூ.15,000 ஊதியம்..!

ஏப்ரல் 4ஆம் தேதி முதல் இந்த திட்டம் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கணக்கு வைத்திருப்பவர் காசோலை வழங்கப்படும் போது வங்கியில் முழுமையான விவரங்களை வழங்க வேண்டும். காசோலை வழங்குபவர், காசோலையின் விவரங்களை வங்கிக்கு SMS, மொபைல் ஆப், நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் மூலம் தெரிவிக்கலாம். இந்த விதிமுறை ரிசர்வ் வங்கியுடன் தொடர்புடையது. எனவே, பஞ்சாப் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த முறை பொருந்தும்.

தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை – மாதம் ரூ.62,000 வரை ஊதியம்!

இந்த திட்டம் மூலமாக வாடிக்கையாளரின் உறுதிப்படுத்துதல் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியாது ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலையை வழங்கினால் வாடிக்கையாளரின் உறுதிப்படுத்தல் அவசியம் ஆகும். மேலும் கணக்கு எண், காசோலை எண், காசோலை தேதி, காசோலைத் தொகை மற்றும் பயனாளியின் பெயர் ஆகிய விவரங்களை வாடிக்கையாளர்கள் வழங்கிய பின்பு தகவல்கள் சரிபார்க்கப்பட்டு ஏதேனும் முரண்பாடு கண்டறியப்பட்டால், காசோலை நிராகரிக்கப்படும் மேலும் இந்த தகவலை வாடிக்கையாளர்கள் வழங்கவில்லை என்றாலும் காசோலை திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!