PF கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க இதை செய்யவும்!
PF திட்டத்தின் மூலமாக வாங்கும் சம்பளத்தில் சிறிய பகுதி சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பணத்தையும் ஹேக்கர்கள் திருட முயற்சித்து வருவதால் PF பணத்தை பாதுகாக்க கட்டாயமாக பயனாளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
PF கணக்கு:
பிஎஃப் கணக்கு என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக பணியாளர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12% மற்றும் அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தப்படும். இந்த PF தொகைக்கு வட்டி விகிதமும் மற்றும் வரி சலுகையும் கிடைக்கும். PF திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வூதிய நிதியை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ஆன்லைன் மூலமாகவே வங்கி கணக்கின் விவரங்களை கேட்டு PF பணத்தை திருடி மோசடியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு PF பயனாளிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான தகவலை காணலாம். அதவது பான், UAN, வங்கி கணக்கு எண் மற்றும் OTP உள்ளிட்ட விவரங்களை மொபைல் போன் மூலமாகவோ, சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களிடம் போன் கால் மூலமாகவோ SMS மூலமாகவோ எந்த விவரங்களையும் கேட்பதில்லை.
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
வாட்ஸ்அப் மூலமாகவும் பிஎப் கணக்கில் டெபாசிட் செய்ய பணம் அனுப்புமாறு சில மோசடிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO ) எப்போதுமே ஊழியர்களுடன் நேரடியாக பணத்தை டெபாசிட் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தாது. இது போன்ற அழைப்புகள் வந்தால் பயனாளிகள் அழைப்பை துண்டித்து சுதாரித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.