PAN, ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – ஜூலை 1க்கு பிறகு ரூ.1000 அபராதம்!
இந்தியாவில் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டும் இன்னும் பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது இணைக்கப்படாதவர்களுக்கு அபராதம் செலுத்தி இணைக்கலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
ஆதார் – பான் இணைப்பு
இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபர் அடையாள ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இதையடுத்து வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் கணக்கு சார்ந்தவைகளுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டியுள்ளது. இதையடுத்து வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் வங்கி கணக்கு திறப்பதற்கும், பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக முதலீடு செய்பவர்களுக்கு பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையே பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் எண் செயலிந்தாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சட்டம் 272B பிரிவின் படி, பான் எண்ணை வழங்க வேண்டிய ஒவ்வொரு முறையும், செயலிழந்த பான் எண்ணை வழங்கினால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். அதனால் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டது.
PM Kisan திட்ட பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ‘Helpline’ அறிமுகம்!
இதையடுத்து தற்போது மேலும் ஒரு ஆண்டுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அபராதம் செலுத்தி தான் நீங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன்படி ஜூன் 30ம் தேதிக்குள் நீங்கள் இணைத்தால் ரூ.500 செலுத்த வேண்டும். இதே போல் ஜூலை 1ம் தேதிக்கு மேல் இணைப்பவர்கள் ரூ.1000 செலுத்தி இணைக்க வேண்டும்.